Wednesday, November 30, 2011

ப்ராஹ்மின் இப்ராஹ்மின் - ரிஷி மூலம், நதி மூலம்


பிராமண ஆச்சாரியர் அணியும் ஆடைக்கும் ஹஜ் யாத்திரை செய்யும் முஸ்லிம்கள் அணியும் "இஹ்ராம்"  எனும் ஆடைக்கும் உள்ள ஒற்றுமையை காணலாம்.

காஃபாவுக்கு வெளியே இப்ராஹிம்(அலை) அவர்களின் பாதச்சுவடுகள் "மகாமே இப்ராஹிம்" எனும் உலோகக் கூண்டுக்குள் பாதுகாக்கப் படுகிறது. முஸ்லிம்களுக்கு இது மிகவும் புனிதமானது. ஹஜ் செய்யும் முஸ்லிம்கள், இங்கே இரண்டு ரக்காத் தொழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

பிராமின்ஸும் இதை மிகவும் புனிதமாகக் கருதி 2500 வருடங்கள் பூஜித்தனர். அதுதான் இன்று பாதபூஜை எனும் சம்பிராதயமாக மாறிவிட்டது.


ஹஜார் அஸ்வத் எனும் கருமையான கல்லை, சொர்க்கத்திலிருந்து வந்த புனிதக்கல் என்று சொல்லி பெருமானார்(ஸல்) முத்தமிட்டார். ஆகையால் முஸ்லிம்களும் இதை தொட்டு முத்தமிடுமின்றனர்.

சிவலிங்கத்தின் அடிப்பகுதியும் இதே வடிவில் கருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கலீபா உமர் சொன்னது: "ஓ கல்லே !!. நீ எந்த சக்தியுமற்ற ஒரு கல் என்பது எனக்கு நன்றாக தெரியும். எங்கள் பெருமானார்(ஸல்) உன்னை தொட்டு முத்தமிட்டதால் நானும் அதையே செய்கிறேன்".

ப்ராஹ்மின் இப்ராஹ்மின் - ரிஷி மூலம், நதி மூலம்:

ப்ராமின் எனும் வார்த்தைக்கு அர்த்தமென்ன என்று எனது பிராமின் நன்பர்களிடம் கேட்டேன். ப்ராமின் என்றால் "பிரம்மனிலிருந்து வந்தவன்" என்று அர்த்தம் என்றார்கள். அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன். எங்கள் வேதம் அப்படித்தான் சொல்கிறது என்றார்கள்.ஆம் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

ப்ராஹ்மின் = ப்ராஹ்ம்+மின்: ப்ராஹ்மின் என்பது அரபி வார்த்தை. "ப்ராஹ்ம்+மின்" எனும் இரண்டு சொற்களின் இணைப்பு. அரபியில் "மின்" என்றால் "அங்கிருந்து, அதிலுருந்து" என்று பொருள்.
ப்ராஹ்ம்+மின் = "ப்ராஹ்ம்"ல் இருந்து", பிரம்மனிலிருந்து.

ப்ராஹ்மணா = ப்ராஹ்ம்+அனா: ப்ராஹ்மணா எனும் சமஸ்கிருத வார்த்தையும் "ப்ராஹ்ம்+அனா" எனும் வார்த்தைகளின் இணைப்பு. அரபியில் "அனா" என்றால் நான் என்று பொருள்.
ப்ராஹ்ம்+அனா = நான் "ப்ராஹ்ம்", நான் இப்ராஹிமின் சந்ததி.

"
ப்ராஹ்ம்" என்பது இப்ராஹ்ம், அப்ராஹ்ம் என்று இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்களை குறிப்பிடுகிறது. அதாவது ப்ராஹ்மின், ப்ராஹ்மணா என்றால் இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்களின் வம்சாவழியினர், சந்ததி என்று பொருள்.

5000 வருடங்களுக்கு முன்பு இப்ராஹிம்(அலை) அவர்களின் தந்தை கோயில்களுக்கு சிலைகளை செய்து தரும் தொழிலை செய்து வந்தார். சிலைவணக்கத்தை எதிர்த்து இப்ராஹிம்(அலை) வீட்டை விட்டு வெளியேறினார். 1400 வருடங்களுக்கு முன்பு புனித கஃபாவில் 360 சிலைகளை வைத்து குறைஷிக்கள் எனும் பிராமின்ஸ் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது புனித கஃபா பெருமானாரின் தாத்தா அப்துல் முத்தலிபின் பொறுப்பிலிருந்தது.

ஏகத்துவத்தை பறைசாற்றிய எம்பெருமானார்(ஸல்) சிலைவணக்கம் செய்த குறைஷிக்கள் இனத்தில் பிறந்தார் என்பதை மறந்து விடலாகாது.

1. ஏகத்துவத்தை ஏற்கா விட்டாலும், சிலவணக்கம் செய்து கொண்டிருந்த குறைஷிக்கள் அனைவரும் இப்ராஹிம்(அலை) அவர்களின் சந்ததியினர். அவரை பெரிதும் மதித்தனர். தங்களை "இப்ராம்-மின்" (இப்ராஹிமிலிருந்து வந்தவர்) என்று சொல்லி பெருமிதம் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இது தவிர ஹஜ்ஜில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் கடமைகளும் திருப்பதியில் ப்ராமின்ஸ் நிறைவேற்றும் கடமைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்பதை மறுக்க முடியாது.

* மொட்டையடித்தல்
* இஹ்ராம் எனும் தையலற்ற வெள்ளைத்துணியை உடலில் சுற்றிக்கொள்ளுதல்
* ஏழு முறை கஃபாவையும் கர்ப்பக்கிருகத்தையும் சுற்றுதல்
* தூண் மீது சிறு கூழாங்கற்களை ஏழு முறை எறிதல் - பூக்களை எறிந்து அர்ச்சித்தல்.
* ஜம் ஜம் எனும் புனித நீர் குடித்தல் - தீர்த்தம் அருந்துதல்

3. திருப்பதியை சுற்றி ஏழு மலைகள் உள்ளன. மெக்காவை சுற்றியும் ஏழு மலைகள் உள்ளன.

பிராமின்ஸின் ஆட்சி அதிகாரத்தின் மையமாக காஃபா இருந்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட உட்பூசல்களால், ஒரு பிரிவினர் பிரிந்து சென்று காஃபா போலவே ஏழு மலைகளால் சூழப்பட்ட திருப்பதியில் கோயில் கட்டி தங்களது வணக்க வழிபாடுகளை நிலைநாட்டினர். இது இப்ராஹ்ம்(அலை) அவர்களுக்கு முன்னால் கூட ஏற்பட்டிருக்கலாம். காஃபாவை முதலில் கட்டியது ஆதம்(அலை) அவர்கள். காஃபா வழிபாட்டு முறைகள் இப்ராஹ்ம்(அலை) அவர்களுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தது.

ஜெருசலேம், ரோம் ஆகிய நகரங்களும் ஏழு மலை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. அதாவது புனித ஸ்தலங்களுக்கும் ஏழு மலைகளுக்கும் ப்ராஹ்ம்(அலை) வம்சாவழிக்கும் உள்ள உறவை புரிந்து கொள்ளலாம்.

4. இப்ராஹிம்(அலை) அவர்களின் துணைவியார் பெயர் சாரா. ப்ரம்மனின் மனைவி பெயர் சர"ஸ்வதி". ஸ்வதி என்றால் தூய்மை. அதாவது தூய சாரா என்று பொருள்.

5. காஃபாவுக்கு வெளியே இப்ராஹிம்(அலை) அவர்களின் பாதச்சுவடுகள் "மகாமே இப்ராஹிம்" எனும் உலோகக் கூண்டுக்குள் பாதுகாக்கப் படுகிறது. முஸ்லிம்களுக்கு இது மிகவும் புனிதமானது. குரைஷி பிராமின்ஸும் இதை மிகவும் புனிதமாகக் கருதி 2500 வருடங்கள் பூஜித்தனர். அதுதான் இன்று பாதபூஜை எனும் சம்பிராதயமாக மாறிவிட்டது.

6. வேதத்தில் பிரம்மா என்பது உருவமற்ற ஏக இறைவனை குறிக்கும். பிரம்மன் என்பது இறைத்தூதர் இப்ராஹ்ம்(அலை) அவர்களை குறிக்கும். ஹிந்து சமய வழிபாட்டில், உருவமற்ற பிரம்மாவுக்கு சிலையும் கிடையாது, சிலைவணக்கமும் கிடையாது என்பது குறிபிடத்தக்கது. உருவவழிபாட்டை எதிர்த்த பிரம்மனுக்கு ஒன்றிரண்டு கோவில்கள் உண்டு. பிரம்மனின் சிலைக்கு மட்டும் தாடியும் உண்டு என்பதும் குறிபிடத்தக்கது.

7. "அக்ரஹாரம்". கஃபாவை "ஹரம்" என்று முஸ்லிம்கள் அழைப்பதுண்டு. ஹரம் என்றால் விலக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது தீமை விலக்கப்பட்ட புனித இடம் என்று பொருள். அக்ரஹா என்றால் ஆட்கொள்வது என்று பொருள். ஆக அக்ரஹாரம் என்றால் புனித இடத்தை ஆட்கொண்டவர் என்று பொருள். அதாவது 2500 வருடம் கஃபாவை ஆட்கொண்ட குரைஷி பிராமின்ஸை குறிக்கும்.

மிருகங்களை கொல்வதும் வேட்டையாடுவதும் ஹரம் வட்டாரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. காஃபா அக்ரஹாரத்தில் வாழ்ந்த பிராமணர் சைவமாக மாறியதற்கு இதுவும் ஒரு வலுவான காரணம் என்று கூட சொல்லலாம்.

No comments:

Post a Comment